Posts

Showing posts from February, 2019

சிக்னல் கொடுத்தாச்சு, அடித்து நொறுக்க தயாராகிறது இந்திய ராணுவம்..!

Image
சிக்னல் கொடுத்தாச்சு, அடித்து நொறுக்க தயாராகிறது இந்திய ராணுவம்..! தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இது உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  இதனிடையே, இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட, மிகவும் ஃபேவ ரைட் நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், பொது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்கள், மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டனர். அவர்களும், அதன் பின்னணியில் இருப்பவர்களும், இதற்காக மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். நமது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுவிட்டது, என்று பகிரங்கமாக தெரிவித்தார். அண்டை நாடு என பாகிஸ்தானையும் மறைமுகமாக மோடி குறிப்பிட்டார். இந்திய பிரதமர் ஒருவர், அண்டை நாட்டுக்கு எதிராக பகிரங்கமாக இவ்வாறு பேசியது இதுதான் முதல் முறையாகும். ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர்...

தேசத்திற்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு சல்யுட்

Image
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனத்தின் மீது, 350 கிலோ வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி, வெடிக்கச் செய்து பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.  இந்த கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு தலைவர்களும், உலக நாடுகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.  பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதல் பற்றி உங்கள் கருத்துக்களை, வீரமரணம் அடைந்த வீரர்களுக்கான அஞ்சலியை எழுதுங்கள் வாசகர்களே.